செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வரை 24 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 3 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித ஓட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனித ஓட்டு தொகுதிகளில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத் தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.



