அமெரிக்கா விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்த போது சுங்கத்துறைக்குச் சொந்தமான நாய் எகிப்தில் இருந்து சென்ற ஹமேத் என்ற நபரின் உடைமையைப் பார்த்து குரைத்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அந்த நாயை எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பையில் சுமார் 45 கிலோ தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நாயின் சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.