பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்து.
பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் நிலநடுக்கத்தைப் பற்றி வெளியிட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.