அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசா, இந்திய விண்வெளிக் கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பவுள்ளது.
அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா நாளை (25) விண்வெளிக்கு செல்லவுள்ளார். மேலும் அவருடன் 3 விண்வெளி வீரர்களும் செல்லவுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் -9 ரொக்கெட் மூலம் ட்ராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19 ஆம் திகதி ரொக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை இத் திட்டம் செயற்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது.