• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஒதுங்காமல் அனைவரும் பங்குபற்ற வேண்டும்.!

Mathavi by Mathavi
June 22, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0
‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஒதுங்காமல் அனைவரும் பங்குபற்ற வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

செம்மணி மனிதப் புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும், ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலுசேர்க்க வேண்டும். தமிழ் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பூரண ஆதரவு வழங்கவேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல், ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயங்களோ, படுகொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பான விடயங்களோ வெளியில் கொண்டுவர முடியாத கையறு நிலையில் அரசுகள் காணப்படுகின்றன. இது தொடர்பான விசாரணைகள் சர்வதேச ரீதியில் நடைபெற்றால்தான் உண்மைகள் வெளியில் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் மனிதப் புதைகுழி அகழ்வின்போது 19 எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளின் எழும்புக் கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 16வருடங்களை கடந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையென்றது தொடர்கதையாவுள்ளது. தமிழர்கள வயது வேறுபாடுகள் இல்லாமல் கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது இதனையே நாங்கள் இனப்படுகொலை என்கின்றோம்.

இதனடிப்படையில் தற்போது இளம் தலைமுறையினைக் கொண்ட அமைப்பானது இந்த விடயத்தினை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செம்மணி வளைவு உள்ள பகுதியில் எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் அணையாத தீபம் என்ற கருப்பொருளில் செயற்பாட்டினை மேற்கொள்ள விருக்கின்றார்கள். இது மனித உரிமை மீறலோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இப்படியான பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு தீர்வைக் காணவேண்டும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதைகுழிகள் அகழப்படும்போதுதான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் மக்கள் செயல் எனச் சொல்லப்படுகின்ற இளையோர் தன்னார்வ அமைப்பானது 23,24,25ஆம் திகதிகளில் இந்தச் செயற்பாட்டினை மேற்கொள்ள விருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கிய தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் இந்த ஜனநாயக ரீதியான மனிதவுரிமைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அணையாத தீபம் என்ற இந்தப் போராட்டமானது எங்களுடைய விடுதலைத் தாகம் அணையாமல் இருந்து கொண்டிருக்கின்றது, மனிதவுரிமை சம்பந்தமான விடயங்களில் நீதி தேடுகின்ற விடயமும் அணையாத தீபமாக எங்களுடைய மனங்களில் இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மனிதவுரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். பல தடுப்புகளுக்கு மத்தியில் அவர் இங்கு வரவிருக்கின்றார். அந்த வேளையில் இப்படியான மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்காத விடயங்கள் சம்பந்தமாக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் இருக்கின்றபோது வடக்கு கிழக்கு என்றில்லாமல் பாதிக்கப்பட்ட உறவுகள், மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். மனிதாபிமானம் மிக்கவர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மொழி வேறுபாடில்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.

செம்மணியில் நடைபெறவுள்ள இந்த மூன்று தினங்கள் கவனயீர்ப்பு போராட்டம் அல்லது சர்வதேசத்தின் மத்தியில் இந்த அநியாயங்களை கொண்டு செல்கின்ற இந்த போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும்.

கிருஷாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வேளையில் அது சம்பந்தமான விசாரணை நடைபெற்றபோது சோமரத்ன ராஜபக்ச என்ற கோப்ரல் அந்தப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட கொலையாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரணையின்போது குறிப்பிட்ட ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். செம்மணிப் புதைகுழியில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள், அந்தக் கொலைகளை செய்த இராணுவ வீரர்கள் யார் என்பதையும் அவர் அந்த இடத்தில் குறிப்பிட்டிருந்தார். கப்டன் துடுக்கல என்ற பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான சாட்சியங்களை அவர்கள் அப்படியே மூடிமறைத்து விட்டார்கள்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்ணை அகழ்கின்ற போது எலும்புக் கூடுகள் வந்துகொண்டிருக்கின்றபடியால் இதற்குரிய சர்வதேச நீதி வேண்டும். சர்வதேச மேற்பார்வையில் இந்தப் புதைகுழிகள் அகழப்பட வேண்டும். இந்த முக்கியமான போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் வலுசேர்க்க வேண்டும். பூரணமான உதவியை வழங்க வேண்டும். இளையோர் அமைப்பு நமக்காக செய்கின்ற இந்த அணையாத தீபம் என்ற போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் அணையாமல் ஒதுங்காமல் பங்குகொள்ள வேண்டும்.

Related Posts

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

by Mathavi
July 20, 2025
0

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்...

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

by Mathavi
July 20, 2025
0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

by Mathavi
July 20, 2025
0

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

by Mathavi
July 20, 2025
0

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

by Mathavi
July 20, 2025
0

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி