ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசர சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பாரிய அளவிலான அழிவு. பல இரண்டு மாடிக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் சில கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.
வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 23 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.