ஈரான் சமாதானத்தை நாடாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால் எதிர்கால தாக்குதல்கள் மிகப்பெரியவையாக காணப்படும் என அமெரிக்காவிற்கான உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சமாதானம் அல்லது ஈரானிற்கு பெரும் துயரம் நிகழலாம். இது கடந்த 8 நாட்களாக நாம் பார்த்ததை விட பெரிய விடயங்கள் இடம்பெறலாம் எனக் குறிப்பிட்டார்.
மேலும் பல இலக்குகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனைய இலக்குகளை துல்லியமாக வேகமாக திறமையுடன் அமெரிக்காவினால் தாக்கமுடியும், ஒரு சில நிமிடங்களில் தாக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.