இன்று(21) உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி வந்த மகிழுந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் (40ஆம் கட்டை ) பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கருங்கல் குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த மகிழுந்தில் பயணித்த பிரயாணிகள் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகிழுந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.