ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை மற்றும் அணு ஆராய்ச்சி நிலையம் மீது இஸ்ரேல் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்கா மோதலில் தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.