கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதி கடந்த 70 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி புனரமைப்பு பணிகள் இன்றையதினம் 21.06.2025 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர், கண்டாவளைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ் வீதியானது 35 மில்லியன் ரூபாய் செலவில் நிரந்தர தார் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.



