கிண்ணியா நகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடனான தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் தலைமையில் முதலாவது கலந்துரையாடல் இன்று (20) நகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர சபையின் வருமான அதிகரிப்பை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாகவும், சபையின் உத்தியோகத்தர்கள் இதற்காக எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது பற்றியும் விவரிக்கப்பட்டது.
இதில் நகர சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


