யாழ்ப்பாணம் – வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி கல்லூரி அதிபர் திருமதி கி.குலசங்கர் தலைமையில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3:00 மணிவரை கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல சுடர்ஏற்றலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ப. அருந்தவச்செல்வன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி.புஸ்பராசா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் சென்று பார்வையிட்டனர்.

