யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மருதலிங்கம் பிரதீபன் கடந்த 2024 மார்ச் 9 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பதில் அரச அதிபராகக் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.