சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.