• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது..! பல விமான சேவைகள் இரத்து

Sangeetha by Sangeetha
June 18, 2025
in உலக செய்திகள்
0
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது..! பல விமான சேவைகள் இரத்து
38
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” எரிமலை செவ்வாய்க்கிழமை முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.

ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.

புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தோனேசிய மொழியில் “ஆண்” என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் “பெண்” என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் “நெருப்பு வளையத்தில்” அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது.

Related Posts

டெக்ஸாஸ் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

டெக்ஸாஸ் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

by User3
July 12, 2025
0

அமெரிக்காவின் - டெக்ஸாஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக...

புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் – 23 பேர் உயிரிழப்பு!

புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல் – 23 பேர் உயிரிழப்பு!

by User3
July 12, 2025
0

மியான்மரில் உள்ள பௌத்த மடாலயம் மீது மியன்மார் விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்துள்ள...

ட்ரம்பின் முடிவால் இலட்சக்கணக்கானோர் எச்.ஐ.வியால் மரணமடையும் அபாயம்!

ட்ரம்பின் முடிவால் இலட்சக்கணக்கானோர் எச்.ஐ.வியால் மரணமடையும் அபாயம்!

by User3
July 12, 2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்.ஐ.வியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால் பல இலட்சம் பேர் மரணமடையும் நிலை...

பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதலை நடத்தலாம் – ஜனாதிபதி ஆலோசகர் எச்சரிக்கை!

பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதலை நடத்தலாம் – ஜனாதிபதி ஆலோசகர் எச்சரிக்கை!

by User3
July 12, 2025
0

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்குதலை நடத்தலாம் என்று நேபாள நாட்டு ஜனாதிபதியின் ஆலோசகர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி