வைத்தியசாலை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இன்று (17) ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, சந்தேக நபர்களை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.