யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார்.
நாளை (18.06.2025) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

