முல்லைத்தீவு – வண்ணங்குளம் ஜி.என் பிரிவில் புதர்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீ பரவியுள்ள இடமானது பனை மரங்களுக்கு அருகில் உள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையைப் பொறுத்து, தீயானது பனைமரங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குத் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது.
எனவே, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தீ உங்கள் வீட்டிற்கு அருகில் வந்தால், உடனடியாக அவதானித்து, பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

