ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி தேவராசா தவசேகரன் (ரமணன்) அவர்களது முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர்.
இதன் அடிப்படையிலேயே வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



