வவுனியா – மன்னார் வீதியில் இரு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து கண்டி வீதி நோக்கி சென்ற உந்துருளி காமினி மகாவித்தியாலயம் முன்பாக பூங்கா வீதியில் திரும்ப முற்பட்டவேளை குறித்த உந்துருளியின் பின்னால் வேகமாக வந்த உந்துருளி மோதி விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


