• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!

Mathavi by Mathavi
June 13, 2025
in இலங்கை செய்திகள், திருகோணமலை செய்திகள்
0
வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.!
Share on FacebookShare on Twitter

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை அதாவது ஜூன் 09 ஆம் திகதி ஆட்சி அமைத்துவிட்டோம் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாநகர சபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

குச்சவெளிப் பிரதேச சபையில் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு வட்டாரங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தோம். இம்முறை நான்கு வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளோம் .

மேற்படி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அந்தந்த சபைகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். மேலும் ஊடகர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

சங்கு கட்சியோடு சபைகள் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? அவர்கள் என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கின்றார்கள்?

பதில் – ஆம் நடத்தினோம். சங்கு கட்சி அதாவது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் என்று கூறியிருந்தோம். பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் எனக் கூறியிருந்தோம்.

மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு துணைத் தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள் . அதுவும் தரலாம் எனக் கூறியிருந்தோம்.

மேற்படி விடயங்களை இறுதியாக ஜூன் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து மாண்புமிகு செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும் கூறியிருந்தேன்.

அவர் என்னை ஜூன் 08 ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார். எனினும் அவர் சந்திக்கவில்லை. பலமுறை நான் தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லை. வேலைப்பளு ஆக இருக்கலாம் அழைப்பார் என நம்புகிறேன் .

உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அண்ணளவாக ஐம்பது சிறு பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கு கொண்டிருந்தேன். அனைத்து கூட்டங்களிலும் மக்கள் கேட்ட கேள்வி தேர்தலுக்கு பின்பு தவிசாளர் தெரிவுகள் எப்படி இடம்பெறும் என்பதாகும். அதற்கு நான் “ஒவ்வோர் உள்ளூராட்சி சபைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜனநாயக முறைப்படி தமக்குள் ஒருவரைத் தெரிவு செய்வர் ” என்று கூறியிருந்தேன் .

மேற்படிக் கருத்தை திருகோணமலையில் உள்ள புத்தி ஜீவிகளும் தமிழ் அரசுக் கட்சியின் நலன் விரும்பிகளும் மிகப் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களும் என்னிடம் வலியுறுத்தி இருந்தார்கள் என்பதனை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம் என நம்புகின்றேன் .

அதற்கமைய வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி சேனுராமன் கருணாநிதி என்பவரைத் தவிசாளர் ஆக தெரிவு செய்தனர்.

மூதூர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரைத் தவிசாளர் பதவிக்கான தமது வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.

திருகோணமலை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி கந்தசாமி செல்வராஜா என்பவரைத் தமது முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழிந்தனர்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி துரைராசா தனராஜ் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.

குச்சவெளிப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜெகதீசன் நிமலஹாசன் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளர் ஆக முன்மொழிந்தனர்.

மேற்படி தெரிவுகள் ஜனநாயக முறைப்படி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

by Mathavi
July 20, 2025
0

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்...

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

by Mathavi
July 20, 2025
0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

by Mathavi
July 20, 2025
0

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

by Mathavi
July 20, 2025
0

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

by Mathavi
July 20, 2025
0

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணி முன்னெடுப்பு..!

by Thamil
July 19, 2025
0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி வெற்றி..!

by Thamil
July 19, 2025
0

14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி