• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு ஆட்சி ஒப்பந்தத்திற்கு எதிரான கண்டன அறிக்கை.!

Mathavi by Mathavi
June 13, 2025
in இலங்கை செய்திகள்
0
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு ஆட்சி ஒப்பந்தத்திற்கு எதிரான கண்டன அறிக்கை.!
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து திரு.ஆ.சுமந்திரன் மற்றும் திரு.சி.வி.கே.சிவஞானம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட சதிச் செயற்பாடுகளால் தன்னால் தமிழ் தேசிய நீரோட்டத்தில் தொடர்ந்து செயற்பட முடியாதுள்ளது என்று காரணம்கூறி அக்கட்சியிலிருந்து வெளியே வந்த திரு.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தற்போது திரு.சி.வி.கே.சிவஞானம் தலைமையிலானதும் தமிழ் மக்களாலும் தமது கட்சி உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்ட தமிழ் தேசியத்தை சிதைத்து தமிழரசு கட்சியை அழிக்கின்றார் என்று அவராலே சென்ற வாரம் வரை குற்றம் சாட்டப்பட்ட திரு.ஆ.சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ் தேசிய விரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியியில் இருந்து விலகிய உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசிய பரப்பில் இவருக்காக மீன் சின்னத்தை வழங்கி நாடாளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் பதவி மோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழ்த் தேசியத்தையும் தமிழ் மக்களின் தேசிய நலன்களையும் பேச்சளவில் மட்டும் வைத்துக்கொண்டு தனது சொந்த நலன்களையும் தமிழ்த் தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணில் எம் இளம் சமுதாயத்தை சீரழிக்கும் என்று தெரிந்துகொண்டும் தனது பிரத்தியோக ஆலோசகரின் ஆலோசனையையும் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தனது சுயலாபம் கருதி சாராயக்கடை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சுக் கடிதம் வழங்கிவிட்டு பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர் போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம். தமிழ்த் தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது.

தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஈ.பி.டி.பியினருடன் தமிழ்த் தேசிய நலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்த் தேசியம் ஒற்றுமைப்படுவதை சிதைக்கும் எண்ணக்கருவுடன் ஒப்பந்தம் செய்த திரு.சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் முன்னர் திரு.வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகத்தானோ தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்த் தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும் நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவு காட்டினர். நாமும் அவ் நம்பிக்கையுடனே தமிழ் மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம். எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன். சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்த் தேசியப் பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம் தேசியத்திற்காக ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.!

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.!

by Mathavi
July 20, 2025
0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத்...

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு.!

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு.!

by Mathavi
July 20, 2025
0

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு சனிக்கிழமை (19) திருகோணமலை புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலக மண்டபத்தில்...

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா. ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.!

by Mathavi
July 20, 2025
0

மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில்...

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, வெளி இணைப்பு இயந்திரம் தீ வைத்து எரிப்பு.!

by Mathavi
July 20, 2025
0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு உந்துருளிகள் சிக்கின.!

by Mathavi
July 20, 2025
0

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக்...

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது.!

by Mathavi
July 20, 2025
0

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்." -...

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

by Mathavi
July 20, 2025
0

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படிப் பெண்ணை...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

கண்டி, உடுதும்பர - மீமுரே பகுதியில் மகிழுந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்...

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜயவர்தன நீக்கம்..!

by Thamil
July 19, 2025
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை...

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

யாழில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை..!

by Thamil
July 19, 2025
0

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (19) சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி