மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் இருந்து நேற்று (12) மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும் இவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.