அண்மையில் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் நேற்று (11) இரவு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
காயங்களுக்குள்ளாகி உடல் நிலை தேறிவரும் இனூஸை சுகம் விசாரித்த அவர்கள், அவருக்கான நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மத் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

