மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களிள் கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஏறாவூர் அல் முனீரா பாலிக்கா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கெபே அமைப்புடன் இணைந்து கொண்டனர்.
இத் தொண்டர்களில் அதிகளவிலான இளைஞர், யுவதிகள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உயர்தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள், அதேபோன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க கூடிய மாணவர்கள், பட்டதாரிகள் எனப் பலரும் தேர்தல் கண்காணிப்பின் போது தொண்டர்களாக சிறந்த முறையில் பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கபே அமைப்பின் மூலம் கடந்த பொதுத் தேர்தலின் போது பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட 18+ வாக்காளர் அறிவு ஊட்டல் நிகழ்ச்சி திட்டத்திற்கும், சமாதானமான தேர்தலுக்காக ஒன்று பாடுவோம் என்ற தொணிப் பொருளில் இடம் பெற்ற நிகழ்ச்சி திட்டங்களுக்காகவும், தேர்தல் தின கண்காணிப்பு நடவடிக்கைகள், வாக்குகளை எண்ணுகின்ற சந்தர்ப்பத்திலான கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் இத் தொண்டர்கள் எந்தவித இலாப நோக்கமும் இன்றி தங்களது கடமையை சரிவர நிறைவேற்றினர் .
மட்டக்களப்பு மாவட்ட கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் இணைப்பாளர் அல்ஹாஜ் மீரா ஷாகிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் விசேட அதிதிகளாக கெபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவுஜூத் மற்றும் கெபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட இணை இணைப்பாளர் எம் தர்ஷன், கபே அமைப்பின் கோரலை பற்று பிரதேச இணைப்பாளர் எம் எஸ் சிராஜீதின், மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம் எஸ் எம் நசீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


