• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

Thamil by Thamil
June 12, 2025
in இலங்கை செய்திகள்
0
வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!
Share on FacebookShare on Twitter

திருகோணமலை, வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது.

வெருகல் – ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றி வந்த அப்பாவிப்  பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதியும், நிவாரணங்களும் கிடைக்காத நிலையில் இந்த நினைவேந்தலைப்  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வில் முதலில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜைகள் இடம்பெற்று பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி ஆத்மாசாந்தி வேண்டி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக்  கட்சியின் தவிசாளர், உதவி தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வெருகல் படுகொலையின் 39 ஆவது நினைவுதினம் இன்றாகும்.

அன்று நாட்டில் நிலவிய யுத்த சூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை அரசு சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கி வந்தது.

இந்நிலையில் 1986 ஆம் ஆண்டு யூன் மாதம் 12 ஆம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரச அதிபராக இருந்த வர்ணசூரியவால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 23 பேர் மாட்டு வண்டில்களுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள்.

அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம் சகோதரர்களாவர்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

1. அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) – ஈச்சிலம்பற்று முகாம்
2. அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்
3. அயாசு முகம்மது அப்துல் லத்தீப் – (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்
4. கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை
5. கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை
6. தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை
7. தம்பிராசா நவரெட்ணம் பூநகர்
8. கனகசபை கனகசுந்தரம் – பூநகர்
9. கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்
10. மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்
11. கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்
12. வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்
13. முத்தையா காளிராசா – பூநகர்
14. முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்
15. வைரமுத்து சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
16. சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
17. வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
18. சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
19. நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்
20. தாமோதரப்பிள்ளை தங்கராசா – ஈச்சிலம்பற்று
21. புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை

அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

யாழ். பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட ஜகத் விக்ரமரத்ன..!

by Thamil
July 18, 2025
0

இன்று (18) சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

சிறப்பாக இடம்பெற்ற பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு..!

by Thamil
July 18, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் பெண் சாரணர் படையணியின் அணிவகுப்பு நிகழ்வு இன்றைய தினம் (18) காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய...

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

by Thamil
July 18, 2025
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன இன்றைய தினம் (18) வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர்...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கமைப்பிலும், வெளி விவகார வெளிநாட்டு...

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

by Thamil
July 18, 2025
0

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11...

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

by Thamil
July 18, 2025
0

மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று (18) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம்...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

by Thamil
July 18, 2025
0

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் 14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்...

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

by Thamil
July 18, 2025
0

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று...

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

by Thamil
July 18, 2025
0

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. நாளைய தினம் (19) இடம்பெற உள்ள இசை நிகழ்வில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி