கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு – 2 மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு பாரிய நூல்களின் அறிமுக விழா 11-06-2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச . நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு -2 எனும் நூலின் அறிமுகத்தினை எமுத்தாளர் க. யோகானந்தனும், கிழக்கின் கவிக்கோர்வை நூலின் அறிமுகத்தினை கவிஞர். மாயன். இ. ஸ்ரீஞானேஸ்வரனும் வழங்க, எமுத்தாளர்களுக்கு பணிப்பாளரினால் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு -2, 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிக்கோர்வை கவிதைத் தொகுப்பையும் வெளியீட்டத்தில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது.



