வட்டவளை – ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது.
மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை – ஆகரவத்தை பிரதான வீதியின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளமையினால் கனரக வாகனம் பயணிக்க முடியாத நிலையில் குறித்த வீதியின் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகள், உந்துருளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஹட்டன், டிக்கோயா டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு ஒன்றும், தோட்ட ஆயுத களஞ்சியசாலையும் மண்சரிவு காரணமாக பகுதி அளவில் பாதிப்படைந்துள்ளது.



