• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

முறைப்பாடுகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது..!

Thamil by Thamil
June 9, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
முறைப்பாடுகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது..!
Share on FacebookShare on Twitter

“பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன” எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அவற்றை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என்றும் கடந்த காலங்களில் மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய போது அவ்வாறான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது பாடசாலை சமூகங்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியிருந்தது எனவும் தெரிவித்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சிறுவர் சட்டங்களினூடான வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்படுதல் தொடர்பான வழிகாட்டுதல் கலந்துரையாடல் நேற்று ன்தினம் சனிக்கிழமை (07) வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் பிரதம அதிதியாகவும், சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். வளவாளர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ம.தற்பரன் ஆகியோர் பங்குபற்றினர்.

ADVERTISEMENT

இதன் முக்கியத்துவம் மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளரால் கருத்து முன்வைக்கப்பட்டது.

பிரதம செயலாளர், நன்னடத்தை திணைக்கள ஆணையாளரால் தெரிவித்த விடயங்களை தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும், கலந்துரையாடுல்கள், வழிகாட்டுதல் செயலமர்வுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

வளவாளராகப் பங்கேற்ற சிரேஷ்ட சட்டத்தரணி ம.தற்பரன், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும், நடைமுறைப்படுத்தலின் போது காணப்படும் கூட்டுப்பொறுப்புப் பற்றியும் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வடக்கு மாகாணத்தில் யாசகம் செய்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார் சட்டங்களையும் மத்திய, மாகாண ரீதியல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிப்படைகின்றனர். இதற்கு மேலதிகமாக குடும்பங்களின் வறுமையும், சமூகத்தில் ஏற்படும் கலாசார மாற்றம், தொலைபேசி பாவனை, சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினூடான இடர்பாடுகளும் காரணமாக உள்ளன. இவர்களுக்கான முறையான வழிகாட்டல்களுடன் சமூகப்பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் மீளிணைத்தல் செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற்பகல் அமர்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார். அவருடன் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசனும் கலந்துகொண்டார்.

ஆளுநர் தனது உரையில், அலுவலர்கள் மத்திய மாகாணம் என்று பிரிந்து செயற்படாமல் எல்லோரும் எமது பிள்ளைகளே என்ற அடிப்படையில் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படுதல் மற்றும் அதனைக் கண்காணித்து கையாளல் தொடர்பான விடயங்களில் கல்வி அமைச்சின் செயலருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு விடயமும் பாதிப்பு ஏற்பட முன்னரே வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், அதற்கு சிறுவர்களுடன் தொடர்புடைய சகல அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள் சிறப்பாகச் செயற்பட்டன என்றும் இப்போது அவை அருகிவரும் நிலையில் அவற்றை மீளவும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும் பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்குரிய ஒழுங்குள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில், சிரேஷ;ட நன்னடத்தை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அலுவலர்கள், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், உள சமூக உத்தியோகத்தர், லீட்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள், மனிதவள உத்தியோகத்தர், நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

Related Posts

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை..!

by Thamil
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

வெருகல் படு கொ*லையின் 39 ஆவது நினைவேந்தல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை, வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) வியாழக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டது. வெருகல் - ஈச்சிலம்பற்று...

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

கனடாவின் என் கடமை நிறுவனத்தினருக்கும் திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்குமிடையிலான சந்திப்பு.!

by Mathavi
June 12, 2025
0

கனடாவின் என் கடமை நிறுவனத்தின் பணிப்பாளருக்கும், திருகோணமலை மீடியா போரத்தின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கிண்ணியா மீடியா போரத்தின் இல்லத்தில் இன்று(12) காலை நடைபெற்றது. கனடாவின் என்...

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

திருகோணமலையில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 12, 2025
0

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப்...

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

by Thamil
June 12, 2025
0

யாழ். பருத்தித்துறையில் மனித மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் இன்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்...

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

by Thamil
June 12, 2025
0

"இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம்...

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

by Mathavi
June 12, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு - 2 மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு பாரிய நூல்களின் அறிமுக விழா...

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
June 12, 2025
0

நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி