• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வடக்கு நிலைமையை நேரில் ஆராய்வார்.!

Mathavi by Mathavi
June 9, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வடக்கு நிலைமையை நேரில் ஆராய்வார்.!
Share on FacebookShare on Twitter

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்குக்கும் நேரில் வந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும் இலங்கைப் பயணத்தின் போது அவர் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு வருகின்றார்.

26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்கத் திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இந்த விஜயத்தின் போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பு கலந்துரையாடலையும் அவர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையகச் சிவில் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது, மலையக மக்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராயவுள்ளதுடன், போரின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகர சபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி.!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகர சபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி.!

by Mathavi
June 16, 2025
0

வவுனியா மாநகர சபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக...

யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!

யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!

by Mathavi
June 16, 2025
0

நேற்றையதினம் (15) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23...

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!

by Mathavi
June 16, 2025
0

யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...

சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!

சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இரு கடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை...

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர்...

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக்...

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?

by Mathavi
June 16, 2025
0

கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?

by Mathavi
June 16, 2025
0

யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி...

யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!

யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், 35 ஆண்டுகளாக முடங்கிய நிலையிலிருந்தது. தற்போது, இந்த ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லவும், வழிபடவும் இலங்கை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி