கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள் இன்று 09.06.2025 காலை 6.00மணி முதல் 24மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை ஆகிய நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகமளிக்காமையால் கால்நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT


