கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு , கட்டைபறிச்சான் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி 52 நிமிட சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினம் அவர்களினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா இடம் பெற்றது.
வேளை நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால்பழப்பூசை,சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர்வார்க்கும் நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்று
நிறைவாக விஷேட தீ பாராதனைகளுடன் பூசை இடம்பெற்று, ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திரு உலாவந்து அடியார்களுக்கு அருள் பாலித்தாள்.

