• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல் நிலை.!

Mathavi by Mathavi
June 6, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
செம்பியன்பற்று கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல் நிலை.!
Share on FacebookShare on Twitter

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே இன்று (6)முற்பகல் 11.00 மணியளவில் முறுகல் நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் பொதுச்சபை செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்வதாக ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது.

ADVERTISEMENT

இந்த தீர்மானத்திற்கு பின்பு குறித்த பிரதேசத்தில் உழவியந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தவர்களை அதிகாரிகளின் உதவியுடன் சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் அகற்றி வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களாக செம்பியன்பற்று கடற் பிரதேசத்தில் சிலர் உழவு இயந்திரம் கொண்டு மீண்டும் கரைவலை தொழிலை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில் கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பொலிஸார், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுடன் குறித்த கரைவலை வாடிகளுக்கு இன்று விஜயம் செய்தனர்.

இதன்போது ஆவணங்களை பரிசோதித்த கடற்தொழில் பரிசோதகர் முறையான அனுமதி பெறவில்லையென்பதனை சுட்டிக் காட்டியதுடன் கடற்தொழில் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய உடனடியாக குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்ய முடியாதென தெரிவித்தார்.

மேற்கொண்டு இந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் பாவித்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தால் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறித்த பரிசோதகர் எச்சரித்தார்.

உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கடற்தாவரங்கள் அழிந்து வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரைவலை தொழிலாளர் ஒருவர்,

கடந்த ஐந்து வருடங்களாக செம்பியன்பற்று பகுதியில் இதே கடல் தொழிலாளர் சங்க நிர்வாகம் எங்களை உழவு இயந்திரம் பாவித்து தொழில் செய்ய அனுமதித்தார்கள்.

ஆனால் திடீரென்று இந்த வருடம் உழவு இயந்திரத்தை பாவித்து தொழில் செய்ய வேண்டாம் இதனால் பாதிப்பு என்று கூறுகிறார்கள்.

அவ்வாறெனில் கடந்த ஐந்து வருடங்களாக ஏன் எங்களை அனுமதித்தார்கள்.

கடந்த வருடங்கள் எங்களிடம் கையூட்டல்களை வாங்கி சென்றவர்கள் இந்த வருடம் நாங்கள் அதை கொடுக்கவில்லை என்பதனால் போலியான விம்பத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கடற்தொழிலுடன் சம்பந்தமில்லாத நபர்களை கூட்டிக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

எமது கரைவலை தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. மனித வலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கின்றது.

ஆகவே தான் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்து வருகிறோம்.

உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது வடமராட்சி கிழக்கில் செம்பியன்பற்று பகுதியில் மட்டுமல்ல வடமராட்சி கிழக்கின் அதிகளவான பகுதிகளில் உழவு இயந்திரம் பாவித்து தான் தொழில் செய்து வருகிறார்கள்.

இலங்கையில் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ஒரு கிராமத்திற்கு ஒரு சட்டம் என்றால் அதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது?

நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கூறியது போன்று நாங்கள் உரிய முறையில் அனுமதி எடுத்து உழவியந்திரம் பாவித்து மீண்டும் கரைவலை தொழில் செய்வோம் என தெரிவித்தார்.

Related Posts

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுப் பிரிவு ஆரம்பித்து வைப்பு..!

by Thamil
June 13, 2025
0

சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவுப் பிரிவு...

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்ப்பணம்..!

by Thamil
June 13, 2025
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை...

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

நல்லூர் பிரதேச சபையின் ஆட்சியை தனதாக்கிய மான்..!

by Thamil
June 13, 2025
0

NPP உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது

by Sangeetha
June 13, 2025
0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 37 உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20...

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

மன்னார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்

by Sangeetha
June 13, 2025
0

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது. முன்னதாக இலங்கை...

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

புல்மோட்டை, பொன்மலைக்குடா ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம்.!

by Mathavi
June 13, 2025
0

புல்மோட்டை -02, பொன்மாலைக்குடாவை சேர்ந்த மூத்த ஆலிம் மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் அவர்கள் நேற்று (12) சுகயீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருந்தார். குறித்த ஜனாஸா இன்று (13) புல்மோட்டை...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா - மன்னார் வீதியில் இரு உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று...

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி.!

by Mathavi
June 13, 2025
0

வவுனியா தெற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 102 பாடசாலைகள் பங்கு...

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.!

by Mathavi
June 13, 2025
0

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன. இந்த முகாம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி