• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மீனவ மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரவிகரன் வலியுறுத்து..!

Thamil by Thamil
June 5, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் – ரவிகரன் சுட்டிக்காட்டு..!
Share on FacebookShare on Twitter

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவ மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் (05) இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கடற்றொழில் அமைச்சருக்கு ஏற்கனவே தாம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்தும், அது தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் ரவிகரனால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும், கடல்வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றது.

கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் செயல்கள் கடுமையாக இல்லை. கடற்றொழில் அமைச்சரும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துருந்தும், இதுவரை நிலமைகள் சீராகவில்லை.

மீனவ மக்களோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவக் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடு உட்பட, தமது அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.

சட்டவிரோதிகள் ஏதேனும் செல்வாக்குகளைப் பயன்படுத்தித்தான் இவ்வாறான அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரோ என்ற ஐயப்பாடு மீனவ மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏன் எனில் அந்த அளவிற்கு சட்டவிரோத கடற்தொழிலாளர்களால் முல்லைத்தீவு கடல்வளம் சூறையாடப்படுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தாலும் இத்தகைய சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நாமாவது கட்டுப்படுத்துவோம் என்னும் நோக்கில் முல்லைத்தீவு கள்ளப்பாடுப் பகுதியிலிருந்து மீனவ மக்கள் தாமாக ஒன்றிணைந்து, சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் ஆறு படகுகளைப் பிடித்திருந்தனர். அதன் பின்புதான் கடற்தொழில் திணைக்களமும் இதில் இணைந்துகொண்டது. அதன்பின்னர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேவேளை தமாக இணைந்து இத்தகைய சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது. கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களமும், கடற்படையும் இணைந்துதான் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் இதன்போது மீனவ மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களமும் தமது ஆளணிப் பற்றாக்குறையை தொடர்ந்து எம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நானும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை எழுத்துமூலமாக கடற்தொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளேன். இதுவரை அந்த ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் மீனவ சமூகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமில்ல கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டில் ஈடுபடும் திருட்டுக் கும்பல்களின் கொட்டத்தை அடக்கி, சட்டவிரோதிகளிடமிருந்து எமது மீனவ மக்களைக் காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கின்றோம்” என்றார்.

Related Posts

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விசேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில் அச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கிச்சிராபுரம்...

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

சுகாதார அதிகாரியின் வங்கிக் கடன் அட்டை மோசடி; பாடசாலையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் ஒருவர் தன்னுடைய பெருந்தொகையான பணத்தை இழந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்தார். சம்பவம் தொடர்பில்...

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள்.!

by Mathavi
June 16, 2025
0

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் கைது செய்யுங்கள் என வடக்கு மாகாண மீனவர்கள் எழுத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கொழும்புக்குச் சென்று...

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது.!

by Mathavi
June 16, 2025
0

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகளை திருடியதாக கூறப்படும் தேரர் உட்பட மூவர் வெலிகம காவல்துறையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்.!

by Mathavi
June 16, 2025
0

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்...

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

கிளிநொச்சியில் பரபரப்பு; ஆணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 16, 2025
0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார்...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” திறந்து வைப்பு.!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” திறந்து வைப்பு.!

by Mathavi
June 16, 2025
0

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து...

விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்ட ஆலய செயலாளர்; எதிராக சட்ட நடவடிக்கை.!

விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்ட ஆலய செயலாளர்; எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 16, 2025
0

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவில் யாப்பு விதி, ஆலயத்தின் பொது சபை, நிர்வாக சபை போன்ற விதி முறைகளுக்கு முரணாக ஆலய செயலாளர் செயற்பட்டு, சட்டவிரோதமாக...

யாழில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!

யாழில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி