கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 3-வது வரிசையில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 17 நிமிட நேரம் தேவைப்பட்டது.
ஜோகோவிச் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் 6-1, 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எளிதில் தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்)-எட்டாம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.
இன்று மாலை பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டிகளில் சபலென்கா (பெலாரஸ்)-ஸ்வியாடெக் (போலந்து) கோகோ காப் (அமெரிக்கா)-பாய்சன் (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.