திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச மீனவர்கள் இன்று (05)கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது மீனவர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?, மீனவனின் நிலைமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.







