• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

உணவு ஒவ்வாமை காரணமாக பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

Mathavi by Mathavi
June 4, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
உணவு ஒவ்வாமை காரணமாக பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
Share on FacebookShare on Twitter

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 67மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போது எந்த ஆசிரியரும் பாதிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை, கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலை, கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

திடீரென ஏற்பட்ட வாந்தி மற்றும் வயற்றுவலி காரணமாக மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

பகல் 12.30 மணிவரையில் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலையிலிருந்து 05 மாணவர்களும், கல்லடி சித்திவிநாயர் வித்தியாலயத்திலிருந்து 30 மாணவர்களும் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்திலிருந்து 09 மாணவர்களுமாக 44 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.

எனினும் வைத்தியசாலையில் சுகாதார பிரிவினரால் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோரினாலும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 67மாணவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு சென்றதாகவும் 06பேர் சிகிச்சை பெற்றுச்செல்லவுள்ளதுடன் 05 மாணவர்கள் சிறுவர் கண்காணிப்பு பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதேநேரம் புனித மைக்கேல் தேசிய பாடசாலை, கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலை, கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்து வழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த உணவகத்தில் அதிகாலை 04 மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் தொடர்பிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

நாளைய தினம் குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்...

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

by Thamil
June 12, 2025
0

"இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம்...

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

by Mathavi
June 12, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு - 2 மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு பாரிய நூல்களின் அறிமுக விழா...

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
June 12, 2025
0

நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி...

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

by Mathavi
June 12, 2025
0

வட்டவளை - ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது. மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய...

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

by Mathavi
June 12, 2025
0

ஏறாவூர்ப்பற்று தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று 12.06.2025 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த கௌரவ முத்துப்பிள்ளை...

Auto Draft

சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டி.!

by Mathavi
June 12, 2025
0

வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் (12) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சி.ஐ.டி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு –  இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு – இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

by Mathavi
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

சமாதான நீதவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்..!

சமாதான நீதவானாக பதவியேற்ற தம்பிராசா ராஜ்குமார்..!

by Mathavi
June 12, 2025
0

திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக 02/06/2025 அன்று திருகோணமலை மாவட்ட நீதிபதியாகிய இஷ்மைல் பவுஷ் ரஷாக் அவர்கள் முன்னிலையில் சமாதான நீதவானாக தம்பிராசா ராஜ்குமார் பதவியேற்றர். தம்பிராசா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி