கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று காலை(3) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே பேருந்தில் இருந்துள்ளனர்.
ADVERTISEMENT
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.
குறித்த பேருந்து கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.