மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று பகல் இருவருக்கும் இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அது துப்பாக்கிச் சூடாக மாறியுள்ளது.
கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இடம்பெற்ற இந்த சூட்டுச் சம்பவத்தில் பா.சதீஸ்குமார் எனும் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
நீர் விநியோகம் தொடர்பாக இருவரிடையே ஏற்பட்ட மோதலின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துப்பாக்கியானது பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.