கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (02.06.2025) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போட்டி பரீட்சை நியமனம் வழங்கக்கோரியும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரச நியமனங்களில் புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது “பேச்சுவார்த்தை போதும் தொழிலை தா”, “அரச சேவையில் கிழக்கு மாகாணத்தை புறக்கணிப்பது ஏன்?”, “பரீட்சை வேண்டாம் தகுதிகான் அடிப்படையில் வேலை வழங்கு” போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT

