• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கில் ஒவ்வொரு வருடமும் இழுத்து மூடப்படும் பாடசாலைகள்; ஆளுநர் சுட்டிக்காட்டு.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0
வடக்கில் ஒவ்வொரு வருடமும் இழுத்து மூடப்படும் பாடசாலைகள்; ஆளுநர் சுட்டிக்காட்டு.!
Share on FacebookShare on Twitter

“வடக்கு மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

யாழ். குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள் அதிபர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில்,

“போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது. மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவது என்பது கடினமானதுதான். ஆனால், அதைச் செய்துள்ளார்கள்.

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்குப் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல் பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்ற வேண்டும்.

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை. வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை.

முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும்.” – என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் திருமதி சிவகெங்கா சுதீஸ்னர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசசேகரி, ஓய்வுபெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வ.கிருஷ்ணசாமி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

Related Posts

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

by User3
July 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்....

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

by User3
July 19, 2025
0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணத்தின் போது நானு ஓயா புகையிரத நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடி, கொண்டாடியுள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற...

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

by User3
July 19, 2025
0

சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய...

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

by User3
July 19, 2025
0

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. இந்த...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

by User3
July 19, 2025
0

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்,...

மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

மூதூர் – திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதி சிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

by User3
July 19, 2025
0

மூதூர் - திருக்கரைசையம்பதி கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் எதிர்வரும் வியாழக்கிழமை (24) மகாவலி கங்கைக்கரையிலே இடம்பெறவுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (23) காலை 10.00...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

by User3
July 19, 2025
0

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளருமான...

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

குற்றவாளிகள் தப்ப முடியாது: அவர்களுக்குத் தண்டனை உறுதி – அமைச்சர் பிமல்!

by User3
July 19, 2025
0

கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது என்றும் விசாரணைகளுக்காகத் திறமையான...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும் – ராஜிதவின் மகன் தெரிவிப்பு !

by User3
July 19, 2025
0

எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

கோர விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கோர விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

by User3
July 19, 2025
0

வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி