யாழில், பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த போது தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளார்.
புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக கரந்தாய் பகுதியில் வைத்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.