பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக 2024.10.22 இல் நியமிக்கப்பட சகாதேவன் இன்று (2025.05.27) அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.சகாதேவனுக்கு எதிராக பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.
கடிதத்தில் சகாதேவனுக்கு எதிரான முறைப்பாடுகளை நியாயமான முறையில் விசாரிப்பதற்காக பனை அபிவிருத்திச்சபை தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து அவர் தற்காலிகமாக அகற்றப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த விஜயரட்ண கடிதம் மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் உட்கட்சி முரண்பாடு காரணமாகவே சகாதேவன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.




