இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு ஆலோசனை முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கடற்றொழில் அமைச்சு தயார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடற்படை, பொலிஸ், இராணுவம் உள்ளிட்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சட்டவிரோத மீன்பிடியால் எமது சொத்துக்கள் அழிக்கப்படுவதோடு எதிர்கால சந்ததிக்கு இல்லாது போகின்றது. இந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
கடற்படை மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்களோடு விரிவாக பேசியிருக்கின்றோம். விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளில் குறிப்பாக வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
கடந்த காலத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் ஓரணியில் அணி திரள வேண்டும் என்று சொன்னவர்கள் ஓடப் பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்கள் கண் குளிரப் பார்க்கின்றனர். தேசிய மக்கள் சக்தியானது இவர்களின் சித்து விளையாட்டுக்கு மக்களை பலிகொடுப்பதற்கு விரும்பவில்லை. இவர்களின் சித்து விளையாட்டு காரணமாக தேசிய மக்கள் சக்தி சில சபைகளை கைப்பற்றும்.