• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!

Mathavi by Mathavi
May 27, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை அமைக்கின்ற போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் உறுதுணையாக இருப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) மதியம் மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைகளை யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது. யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான அனைத்து உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.

அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றதோ, அந்த முடிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவை வழங்குவதாக தீர்மானித்துள்ளோம். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்தோம். தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை ஆட்சி அமைப்போம் என்று. இன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் ஒருபோதும் மாறிச் செல்லவில்லை. மாறிப் போகவும் மாட்டோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை சரியான முடிவை இத்தருனத்தில் எடுக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகள் ஆட்சியை அமைக்க வேண்டும்.அதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளில் இருந்தும் 13 உறுப்பினர்களை பெற்றுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் மன்னார் மாவட்டத்தில் 2 வது பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம்.

ஆட்சி அமைக்கின்ற போது சரியான பங்கு எமக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எமது உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வாக்குகளை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஆட்சியை அமைப்போம். சரியான ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்து செயற்படுவோம். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்ற ஊழல்களை நாங்கள் வெளியில் கொண்டு வருவோம்.

மேலும் தேர்தல் காலங்களில் நாங்கள் மக்களுக்கு தெரிவித்தோம். மத்திய அரசாங்கத்தை ஆதரிக்காதீர்கள். அவர்கள் தீமையான மக்களை பாதிக்கும் திட்டங்களை எமது மண்ணில் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் பல முறை எடுத்துக் கூறினோம்.

அதனையும் மீறி சில மக்கள் தமது அறியாமையினால் அவர்களுக்கு வாக்களித்தனர். அதன் விளைவாக இன்று இந்த அரசாங்கம் வளங்களை கொள்ளை அடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை பொருட்படுத்தவில்லை. அதன் பலனை இன்று அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் பட்சத்தில் மாவட்டத்தில் இடம்பெற உள்ள தீய திட்டங்களை எம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

எனவே சுய தேவைகளுக்காக மற்றக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணத்தை கைவிட்டு, மக்களின் நலன் கருதியும் மாவட்டத்தின் நலன் கருதியும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும்.

நாங்களும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 14, 2025
0

இன்றையதினம் யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் 2 கிராம் 150 ஹெரோயினுடன், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

by Thamil
June 14, 2025
0

நமது நாட்டை சுற்றுலாத்தளமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜூன் 13 ஆம்...

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

by Thamil
June 14, 2025
0

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இல்லத்தின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

by Thamil
June 14, 2025
0

கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

by Thamil
June 14, 2025
0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு...

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

by Thamil
June 14, 2025
0

கடற்படையின் 28 வது கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2025.05.28 அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை...

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

by Sangeetha
June 14, 2025
0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா,...

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப்  போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

by Sangeetha
June 14, 2025
0

கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம்...

ஏழைக்  குடும்பத்திற்கு  வீடு கட்டிக் கொடுத்தல்

ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தல்

by Sangeetha
June 14, 2025
0

வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பத்திற்கான வீட்டுக்கு இன்று 14/06/2025 கல் வைப்பு நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி