கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுள்ள பகுதியில் நேற்றிரவு 7.30 இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 33 வயதுடைய 1 பிள்ளையின் தந்தை ஆவார்.
வெதமுல்லயிலிருந்து கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த பாரவூர்தி ஒன்றை வழியில் நிறுத்திவிட்டு இறங்கிய பாரவூர்தியின் சாரதி, பாரவூர்தியின் சில்லுக்கு கல் ஒன்றை வைக்க முற்பட்ட போது குறித்த பாரவூர்தி தானாக நகர்ந்து சாரதி மீது ஏறிச் சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து பாரவூர்தியின் சாரதியை பிரதேச மக்கள் உடனடியாக அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற சாரதி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.