• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாகி இருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.!

Mathavi by Mathavi
May 27, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாகி இருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.!
Share on FacebookShare on Twitter

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாகிருப்பதால் தான் இன்று இந்த கருத்தாடல் நிகழ்வுற காரணமாகி இருக்கின்றது என WCA அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

அனைத்தும் வரி குறைக்கப்படும் விலை குறையும் என்றார்கள் ஆட்சியாளர்கள். எதற்காக மீண்டும் மின்சாரத்துக்கு 18 வீதத்துக்கும் அதிக உயர்வு? இதில் என்ன நியாயம் இருக்கின்றது துறைசார் விற்பனரே இதற்கு சொல்லவேணும்.

இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே மாற்றமாக ஏற்பட்டுள்ளதே தவிர பொருளதார நெருக்கடியோ வழங்கிய வாக்குறுதிகளோ நிறைவு செய்யப்படாது மக்கள் ஏமற்றப்பட்டதே மிச்சமாக உள்ளது.

இந் நிலையில் மக்களின் மீது மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு என்ற சுமை சுமத்தப்படுவதாகாகவும் அது தொடர்பில் இங்கு ஆலோசனை செய்ய ஒன்றுகூடியுள்ளது நகைப்புக்குரியது.

நாட்டின் இயற்கை வளத்தால் நிறைவுசெய்யும், உற்பத்தி செய்யக்கூடிய ஏதுநிலை இருந்தும் உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்காக குறைக்க வேண்டிய மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்காக ஆராய்கின்றோம் என்பதே உண்மை நிலைமையாக உள்ளது.

வலுவான பொறிமுறைகள் இன்றி தள்ளாடும் இலங்கையின் திட்டமிடல்களுள் இது நிர்ப்பந்த உயர்வாகவே அமைகின்றது.

ஆனாலும் இந்தக் கட்டண உயர்வை ஏற்க முடியாது. இது மக்களை மேலும் வறியவர்களாக்குவதுடன் சிறுதொழில் முயற்சியாளர் மட்டுமல்லாது விவசாயிகள் பெரும் நிறுவனங்களும் செயலிழக்கும் நிலையை உருவாக்கும் என்பதே உண்மை.

இலங்கையில் தற்போது சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி என இயற்கை வடிவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் ஏதுநிலை இருக்கும் போது ஏன் அனல் மின் உற்பத்திக்கு ஊக்குவிக்கும், அதில் தங்கி இருக்கும் நிலையிலும் எமது நாடு இருக்கின்றது. இதை ஏன் வல்லுநர்கள் சிந்திப்பதாக இல்லை. இதற்கு தீர்வு காணப்படுதல் அவசியம்.

ஆட்சியில் தற்போது இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறியது கடந்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி செய்ததாக. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த அவர்களால் ஏன் கட்டணங்களை குறைக்க முடியாதுள்ளது. அல்லது சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசு பணிந்து விட்டதா? அல்லது இவர்களும் ஊழல் செய்கின்றார்களா? அல்லது கடந்த ஆட்சியாளர் மேல் இவர்கள் பொய்க் குற்றம் சுமத்தி உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றினார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுகின்றது.

இதேவேளை மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று. மக்களின் இந்த அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்வது நல்லதாகாது.

இதேவேளை ஏற்கனவே கட்டண உயர்வுக்கான முடிவை எடுத்துவிட்டு கண்துடைப்புக்காக இப்போது கருத்துக் கேட்பதும் ஊழல் தான். இதற்கும் மக்களின் வரியே அரச நிதியாக செலவாகின்றது.

அத்துடன் வறிய மக்களின் உழைப்பை மேலும் சுரண்டும் செயலாகவும் இது அமையும்.

இது ஒருபுறம் இருக்க தற்போது எங்கு பார்த்தாலும் சூரிய மின் உற்பத்திக்கான கட்டமைப்புகள் முளைக்கின்றன.

ஆனால் அந்த மின்சாரத்தை பிரதான கட்டமைப்பில் இணைப்பதில் மின்சார சபை செய்யும் குழறுபடியும், ஆயிரம் அரசியலும் நடக்கின்றது.

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுமுழுவதும் இயற்கை வளங்கள் இருப்பதும் அதைப் பயன்படுத்தாது அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பது வெட்கக்கேடாகும்.

அந்தவகையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எடுக்கும். இந்த கருத்துக் கேட்கும் முயற்சியில் மின்கட்டணம் அதிகரிக்க கூடாது, மக்களை மீண்டும் வறுமைக்கு உள்ளாக்க கூடாது என்பதை எனது பதிவாக முன்வைப்பதுடன் சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்த சிறந்த பொறிமுறை வகுக்கப்பட்டு அனல்மின் மாபியாவின் படியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றேன்
என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி