நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (26) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 477 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுடன் 150 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 170 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 147 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 193 கிராம் 577 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 190 கிராம் 398 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 37360 கஞ்சா செடிகளும், 08 கிலோ 743 கிராம் 155 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 108 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.