சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் வேன் ஒன்றில் மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தெதுரு-ஓயா வீதிக்கு அருகில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது வேனில் பயணித்த குறித்த பெண்ணிடமிருந்து 64 பெட்டிகள் அடங்கிய மருந்துகளை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த வியடம் தொடர்பில் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெண் வழங்கிய பதில் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் மருந்துகளையும் வேனையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.