• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ; சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு..!

Thamil by Thamil
May 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ; சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு..!
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்ப சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அரச தரப்பினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2 கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி, மேலும் சில கேள்விகளை எழுப்பியதுடன் சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து எழுந்த ஆளும் தரப்பு எம்.பி. கெளஷல்யா ஆரியரத்ன, “தயாசிறி எம்.பி. எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினை நிலையியற் கட்டளைக்கு முரணானது. சபையை அவர் தவறாக வழிநடத்தி இருக்கின்றார்” என்று தெரிவித்தார்.

இதன்போது தயாசிறி எம்.பி. அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தயாசிறி எம்.பி., கெளஷல்யா எம்.பியைப் பார்த்து ஏதோ தெரிவித்தார். அதன்போது அவரின் ஒலிவாங்கி முடக்கப்பட்டிருந்தது.

இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி நிதியத்தின் கொள்ளையடித்தவர், ஏழைகளின் பணத்தைச் சூறையாடியவர் என்றவாறாக கடும் ஆவேசமாகத் தயாசிறி எம்.பியைப் பார்த்துத் தெரிவித்தார்.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருடன் இன்னும் சில அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்தனர். அரச தரப்பினர் தமது கருத்துக்களை ஒழுங்குப் பிரச்சினை என்ற அடிப்படையில் முன்வைக்க அனுமதித்த சபாநாயகர் எதிர்க்கட்சியினருக்கு நேரம் வழங்க மறுத்து விட்டார். இதனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி . சிவஞானம் சிறீதரனுக்கு விசேட கூற்று முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவர் உரையாற்ற முடியாதளவுக்கு சபை அமளிதுமளி பட்டுக்கொண்டிருந்தது. சிறீதரன் எம்.பி. தனது கருத்துக்களை முன்வைக்கப் பல தடவைகள் முயன்ற போதும் அது முடியவில்லை.

இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி, “நான் 20 செக்கன்கள் இடையில் உரையாற்றிய போது என்னைச் சபையில் இருந்து வெளியில் அனுப்பினீர்கள். ஆனால், தற்போது இவ்வளவு பேர் கூச்சலிட்டுக் கொண்டிக்கும்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே?” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இவ்வாறாக சபை நடவடிக்கைகள் சுமார் 20 நிமிடங்கள் வரை கடும் அமளி துமளிக்கு மத்தியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இறுதியில் அனைவரும் அமைதியாகினர்.

Related Posts

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

by Sangeetha
June 14, 2025
0

தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

by Sangeetha
June 14, 2025
0

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

மக்களை ஏமாற்ற வேண்டாம்; வாக்குறுதியளித்த முறைமை மாற்றம் எங்கே?- சஜித்

by Sangeetha
June 14, 2025
0

"தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்று வரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ...

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவோம் – ஆளும் தரப்பு தெரிவிப்பு!

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவோம் – ஆளும் தரப்பு தெரிவிப்பு!

by Sangeetha
June 14, 2025
0

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – அருவி நிறுவனம் வலியுறுத்து!

மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – அருவி நிறுவனம் வலியுறுத்து!

by Sangeetha
June 14, 2025
0

ஏனைய பிரைஜைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்று வலுவுள்ளோருக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனஅருவி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

by Sangeetha
June 14, 2025
0

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் (14.06.2025) காலை 8.30  மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின்...

சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை எடுத்து வந்த சந்தேகநபர் கைது!

சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை எடுத்து வந்த சந்தேகநபர் கைது!

by Sangeetha
June 14, 2025
0

முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை கொண்டு சென்ற ஒருவர் காவல்துறையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தின் கீழ்...

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வண்டு மொய்த்த உணவு பொருட்கள் பறிமுதல்!

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வண்டு மொய்த்த உணவு பொருட்கள் பறிமுதல்!

by Sangeetha
June 14, 2025
0

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று நேற்றையதினம் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி